rishabdas
Wednesday, March 12, 2014
> ஒருமுறை (14.6.1932), ஆந்திர
> மாநிலத்தின்
> நகரியில்
> முகாமிட்டிருந்தார்,
> காஞ்சி மகான்.
> அப்போது,
> கும்பகோணத்தில்
> உள்ள அவருடைய தாயார்
> மகாலக்ஷ்மி
> அம்மாள் சிவபதம்
> அடைந்துவிட்டார்
> எனும் தகவல்
> சுவாமிகளுக்குத்
> தெரிவிக்கப்பட்டது.
>
> ஆச்சார்யக்
> கடமையை
> நிறைவேற்றும்
> வகையில், நீராடிய
> சுவாமிகள்,
> அந்தணர்களுக்குத்
> தானம் அளித்து, தன்
> கடமையைச் செவ்வனே
> நிறைவேற்றினார்.
>
> பெரியவாளின்
> மனதுள் மெல்லியதான
> அந்த எண்ணம்
> ஒருநாள் உதித்தது.
> ‘ஈச்சங்குடியில்
> உள்ள, அவருடைய தாயார்
> பிறந்த இல்லத்தை
> வேத பாடசாலையாக்க
> வேண்டும்; அந்த
> இடத்தில், எப்போதும்
> வேத கோஷம்
> முழங்கிக்கொண்டே
> இருக்கவேண்டும்’ என
> விரும்பினார்
> பெரியவாள்.
>
> காலங்கள் ஓடின.
> 93-ஆம் வருடம்.
> காஞ்சி
> மகாபெரியவாளின்
> பக்தரான ஹரி,
> பெங்களூருவில்
> இருந்து, அவரைத்
> தரிசிப்பதற்காக
> வந்திருந்தார்.
>
> அவரிடம் பெரியவா,
> ”ஈச்சங்குடி
> கச்சபுரீஸ்வரர்
> கோயிலுக்குப்
> புனருத்தாரணம்
> பண்ணணும்னு
> விரும்பறே!
> நல்லது, பண்ணு!”
> எனச் சொன்னதும்,
> நெகிழ்ந்துவிட்டார்
> அவர்.
>
> அந்தக் கோயில்
> குறித்தும்,
> ஸ்ரீகச்சபுரீஸ்வரர்
> குறித்தும்,
> ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய
> கருணை குறித்தும்
> விரிவாக எடுத்துரைத்த
> பெரியவா,
> சிறு வயதில்
> அந்தக் கோயிலுக்குச் சென்றதையும்,
> அங்கே அமர்ந்து
> வேதங்கள்
> கற்றதையும்
> விவரித்தார்.
>
> என்ன நினைத்தாரோ…
> சட்டென்று
> அன்பரிடம்”ஒரு
> உபகாரம் பண்ண
> முடியுமோ?” என்றவர்,
> ஈச்சங்குடியில்
> உள்ள தாயாரின்
> இல்லம் குறித்தும்,
> அந்த இடத்தை வேத
> பாடசாலையாக அமைக்க
> வேண்டும் என்கிற தன்
> விருப்பம்
> குறித்தும் சொல்லி,
> ”இது
> எல்லாருக்கும்
> உபயோகமா இருக்கும்”
> என்றார் காஞ்சி மகான்.
>
> உடனே ஹரி, ”இது என்
> பாக்கியம்! என்
> பாக்கியம்!’ என்று
> சொல்லி, ஆனந்தத்தில்
> அழுதேவிட்டார்.
>
> ‘எத்தனையோ
> கோயில்களைப்
> புனரமைத்தவர்
> மகாபெரியவா!
> பூமிக்குள் மறைந்து
> கிடந்த
> கோயில்களைக் கூட
> அடையாளம் காட்டி,
> அந்தக் கோயிலை
> வழிபாட்டு
> ஸ்தலமாக மாற்றி
> அருளிய மகான்.
> தான் சம்பந்தப்பட்ட
> எண்ணம், தன்னுடைய
> தாயார் வாழ்ந்த வீடு
> என்பதால்
> இத்தனை வருடங்களாக
> எவரிடமும்
> சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’
> என,
> ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி
> சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும்
> வியந்துபோய்ப்
> பெரியவாளைப் பார்த்தனர்.
>
> பிறகென்ன… அந்த
> வீடு,
> விலைக்கு வாங்கப்பட்டது.
> அன்பர்களின்
> கூட்டு முயற்சியில்,
> வேத பாடசாலைப்
> பணிகள் துவங்கின.
> புதிதாகத்
> துவங்கும்
> வேத பாடசாலையில்,
> குரு
> பூஜை நடத்துவதற்காக பெரியவாளின்
> ஆசியைப் பெற வந்தார்
> அன்பர் ஹரி.
>
> அன்றைய தினம், 8.1.94.
>
> அதாவது, தனது கருணைப்
> பார்வையாலும்
> தீர்க்க
> தரிசனத்தாலும்
> உலக மக்களை உய்வித்த
> அந்த நடமாடும்
> தெய்வம், அன்றைய
> தினம் ஸித்தி
> அடையப் போகிறார்
> என்று யாருக்குத்தான்
> தெரியும்?!
>
> பெரியவா அன்றைய
> தினம் யாருக்குமே
> தரிசனம் தரவில்லை.
> ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம்.
> பிரபலங்களின் வருகையும்
> பெரியவாளுக்குத்
> தெரிவிக்கப்பட்டது.
>
> அதே போல்,
> ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி
> வந்திருக்கார்’
> என்றும்
> சொல்லப்பட்டது.
> சட்டென்று கண்
> திறந்த பெரியவா,
> மெள்ள நிமிர்ந்தார்.
> அருகில்
> வரச்சொன்னார். பாதுகைகளை
> அணிந்துகொண்டார்.
> அன்பரை
> ஆசீர்வதித்தார்.
>
> வேத
> பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப்
> பெரியவாளிடம்
> காட்டினர்.
> அதை வாங்கிப்
> படித்தவர்,
> அதிலிருந்த தன்னுடைய
> பெற்றோரின்
> புகைப்படத்தை
> கண்களில்
> ஒற்றிக்கொண்டார்.
> பிறகு தன்னுடைய
> பாதுகைகளை
> அன்பரிடம் தந்தார்.
> ”இந்தப் பாதுகைகளை
> எடுத்துண்டு
> போ! ஈச்சங்குடி வேத
> பாடசாலையில வை. நன்னா
> நடக்கும்!’
> என சொல்லாமல்
> சொல்லி,
> ஆசி வழங்கினார்.
>
>
>
>
>
> ஈச்சங்குடி வேத
> பாடசாலை,
> அவரின் பேரருளால்
> இன்றைக்கும்
> இயங்கி வருகிறது.
> ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால்,
> வேத பாடசாலையில்
> தற்போது
> புனரமைப்புப்
> பணிகள் நடைபெற்று
> வருகின்றன.
> கீழ்த்தளத்தில்
> வேத பாடசாலை, மேல்
> தளத்தில்
> பள்ளிக்கூடம்
> எனக் கட்டுகிற
> முயற்சிகள்
> மேற்கொள்ளப்பட்டு
> வருகின்றன.
>
> பெரியவாளின்
> தாயாரால் வணங்கப்
> பட்டு,
> பெரியவாளின்
> முயற்சியால்
> புனருத்தாரணம்
> செய்யப்பட்ட
> ஸ்ரீகச்சபுரீஸ்வரர்
> கோயில், அழகுறத்
> திகழ்கிறது.
> இவரை வணங்கினால்,
> நிலம் மற்றும்
> வாஸ்து பிரச்னைகள்
> யாவும் நீங்கி, வீடு-
> மனையுடன்
> குறையின்றி வாழ்வர்
> என்பது ஐதீகம்!
>
> அருகில் உள்ள வேத
> பாடசாலைக்குச்
> சென்று,
> அங்கேயுள்ள
> பெரியவாளின்
> பாதுகைகளை நமஸ்கரித்தால்,
> ஞானகுருவின்
> பேரருளும்
> கிடைக்கும் என்பது
> உறுதி!
>
>
>
>
>
>
> பிரபல
> ஹரிகதா விற்பன்னர்
> ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ்
> பாலக்ருஷ்ண
> சாஸ்திரிகள் சொன்னது
>
>
>
>
>
> காஞ்சிபுரத்திலே
> இருக்காளே, காமகோடி
> பெரியவா...சர்வஞா அவா.
>
> ஒரு தடவை
> கும்பகோணத்திலே,
> தர்சனத்துக்கு நாங்க
> எல்லாம் போயிருந்தோம்.
> என் மாமனார்
> அழைச்சிண்டு
> போயிருந்தார்.
>
> எனக்கா, மனசிலே ஒரு
> பயம். ஸ்வாமிகள்
> ரெண்டு, மூணு ன்னு
> பண்ணிடுவார், பூஜை
> முடிக்க. அப்புறம் நம்ப
> சாப்பிடறதுக்கு
> இன்னும் நேரம் ஆயிடும்
> ன்னு...
> அதனால நான் பூஜைக்கு
> வரலை ன்னுட்டு
> மடத்துக்கு போகலே.
>
> என் மாமனார் இதை
> திருத்த முடியாது
> ன்னுட்டு கிளம்பி
> போய்ட்டார். அங்கே
> பெரியவா, 'மாப்பிள்ளை
> (என்னைத்தான்!!) எங்கே?'
> ன்னுருக்கார்.
> 'அவருக்கு உடம்பு சரி
> இல்லே, ரூம்ல
> இருக்கார்' ன்னு
> சொல்லி இருக்கார் என்
> மாமனார்.
>
> 'அவரை இங்கே
> அழைச்சுண்டு வா'
> என்று சொன்னார்
> பெரியவாள். வந்து
> கூப்ட்டா.
>
> எனக்கு கையும் ஓடலே,
> காலும் ஓடலே...
>
> வெடவெடன்னுண்டு
> பெரியவா முன்னாடி போய்
> நின்னேன்.
>
> 'ஓடம்பு
> சரியில்லையோ?'
> அப்டின்னார் பெரியவா.
>
> நான் மாமனாரை
> பார்த்தேன்.
>
> 'ஆமா, அவருக்கு உடம்பு
> சரி இல்லே....' ன்னு
> சொல்லிட்டு இது ஏன்
> இப்படி படுத்தறது
> என்கிற மாதிரி
> பார்த்தார் மாமனார்
> என்னை.
>
> 'ஆமாம் பெரியவா,
> எனக்கு உடம்பு சரி
> இல்லே'.
>
> 'குளத்துலே
> குளிச்சியோ?'
>
> திரும்பவும் ஒரு முழி
> முழிச்சிட்டு, 'ஆமாம்
> பெரியவா, குளத்திலே
> குளிச்சேன்'.
>
> 'தண்ணி நிறையா
> இருக்கோ, ரொம்ப
> ஜில்லுன்னு இருக்கோ'.
>
> 'ஆமாம் பெரியவா'
> என்று சொன்னேன். என்
> மாமனார் தலையில் தான்
> அடித்துக் கொள்ள
> வில்லை என்னை
> பார்த்தார் பரிதாபமாக.
>
>
> 'ஜுரமோ, உடம்பு ரொம்ப
> சுடறதோ?' பெரியவா....
>
> 'ஆமாம் பெரியவா...'
> நான்.
>
> 'சரி, உடம்பு சரி
> இல்லேன்னா...ஒண்ணும்
> சாப்ட படாது. வயத்தை
> லங்கணம் போடறது தான்
> அதுக்கு நல்ல மருந்து.
> நானும் இன்னிக்கு பூஜை
>
> ரொம்ப விஸ்தாரமாவே
> பண்ணப்போறேன்...
> அப்படியே ஒரு ஓரமா
> செவுத்துலே சாஞ்சு
> ஒக்காந்துக்கோ...மூணு
> நாலு மணி ஆயிடும்.
>
> பூஜை முடிஞ்சா விட்டு,
> தீர்த்த பிரசாதம்
> தரேன். அதை வாங்கிண்டு
> அப்புறமா கொஞ்சமா
> ரசஞ்சாதமா சாப்பிடு.
> எல்லாம் சரியா
> போயிடும்'.
>
> அத்தனையும் அவா
> கண்டுபிடிச்சிடுவா...
>
>
ATM
Customer can now block ATM card by sending sms from registered mobile to 567676 by typing BLOCK last four digits of the card number. the word block can be either in caps or small letter, no problem. the blocking takes place immediate and cust gets a ticket number confirming it . pl share the information with ur contacts on /mail.
Church Moment - Proudly South African
In a church in Umlazi one Sunday morning a preacher said, "Anyone with 'special needs' who wants to be
prayed over, please come forward to the front of the altar."
With that, Sipho got in line and when it was his turn the Preacher asked, "Sipho, what do you want me
to pray about for you?"
He replied, "Preacher, I need you to pray for help with my hearing."
The preacher put one finger of one hand on Sipho's ear, placed his other hand on top of Sipho's head, and
then prayed and prayed and the whole congregation joined in with much enthusiasm.
Description: Description: Description: Description: Description:https://mcx.mweb.co.za//email.aspx/DownloadEmbeddedImage?folderPath=INBOX&messageId=30999&attachmentId=D555582841584E4EA0D7D93EC9C8666C@TonyBryanPC
After a few minutes, the preacher removed his hands, stood back and asked, "Sipho, how is your hearing now?"
Sipho answered, "I don't know. My hearing is only next Thursday."
Subscribe to:
Posts (Atom)