Wednesday, March 12, 2014

> ஒருமுறை (14.6.1932), ஆந்திர > மாநிலத்தின் > நகரியில் > முகாமிட்டிருந்தார், > காஞ்சி மகான். > அப்போது, > கும்பகோணத்தில் > உள்ள அவருடைய தாயார் > மகாலக்ஷ்மி > அம்மாள் சிவபதம் > அடைந்துவிட்டார் > எனும் தகவல் > சுவாமிகளுக்குத் > தெரிவிக்கப்பட்டது. > > ஆச்சார்யக் > கடமையை > நிறைவேற்றும் > வகையில், நீராடிய > சுவாமிகள், > அந்தணர்களுக்குத் > தானம் அளித்து, தன் > கடமையைச் செவ்வனே > நிறைவேற்றினார். > > பெரியவாளின் > மனதுள் மெல்லியதான > அந்த எண்ணம் > ஒருநாள் உதித்தது. > ‘ஈச்சங்குடியில் > உள்ள, அவருடைய தாயார் > பிறந்த இல்லத்தை > வேத பாடசாலையாக்க > வேண்டும்; அந்த > இடத்தில், எப்போதும் > வேத கோஷம் > முழங்கிக்கொண்டே > இருக்கவேண்டும்’ என > விரும்பினார் > பெரியவாள். > > காலங்கள் ஓடின. > 93-ஆம் வருடம். > காஞ்சி > மகாபெரியவாளின் > பக்தரான ஹரி, > பெங்களூருவில் > இருந்து, அவரைத் > தரிசிப்பதற்காக > வந்திருந்தார். > > அவரிடம் பெரியவா, > ”ஈச்சங்குடி > கச்சபுரீஸ்வரர் > கோயிலுக்குப் > புனருத்தாரணம் > பண்ணணும்னு > விரும்பறே! > நல்லது, பண்ணு!” > எனச் சொன்னதும், > நெகிழ்ந்துவிட்டார் > அவர். > > அந்தக் கோயில் > குறித்தும், > ஸ்ரீகச்சபுரீஸ்வரர் > குறித்தும், > ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய > கருணை குறித்தும் > விரிவாக எடுத்துரைத்த > பெரியவா, > சிறு வயதில் > அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், > அங்கே அமர்ந்து > வேதங்கள் > கற்றதையும் > விவரித்தார். > > என்ன நினைத்தாரோ… > சட்டென்று > அன்பரிடம்”ஒரு > உபகாரம் பண்ண > முடியுமோ?” என்றவர், > ஈச்சங்குடியில் > உள்ள தாயாரின் > இல்லம் குறித்தும், > அந்த இடத்தை வேத > பாடசாலையாக அமைக்க > வேண்டும் என்கிற தன் > விருப்பம் > குறித்தும் சொல்லி, > ”இது > எல்லாருக்கும் > உபயோகமா இருக்கும்” > என்றார் காஞ்சி மகான். > > உடனே ஹரி, ”இது என் > பாக்கியம்! என் > பாக்கியம்!’ என்று > சொல்லி, ஆனந்தத்தில் > அழுதேவிட்டார். > > ‘எத்தனையோ > கோயில்களைப் > புனரமைத்தவர் > மகாபெரியவா! > பூமிக்குள் மறைந்து > கிடந்த > கோயில்களைக் கூட > அடையாளம் காட்டி, > அந்தக் கோயிலை > வழிபாட்டு > ஸ்தலமாக மாற்றி > அருளிய மகான். > தான் சம்பந்தப்பட்ட > எண்ணம், தன்னுடைய > தாயார் வாழ்ந்த வீடு > என்பதால் > இத்தனை வருடங்களாக > எவரிடமும் > சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ > என, > ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி > சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் > வியந்துபோய்ப் > பெரியவாளைப் பார்த்தனர். > > பிறகென்ன… அந்த > வீடு, > விலைக்கு வாங்கப்பட்டது. > அன்பர்களின் > கூட்டு முயற்சியில், > வேத பாடசாலைப் > பணிகள் துவங்கின. > புதிதாகத் > துவங்கும் > வேத பாடசாலையில், > குரு > பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் > ஆசியைப் பெற வந்தார் > அன்பர் ஹரி. > > அன்றைய தினம், 8.1.94. > > அதாவது, தனது கருணைப் > பார்வையாலும் > தீர்க்க > தரிசனத்தாலும் > உலக மக்களை உய்வித்த > அந்த நடமாடும் > தெய்வம், அன்றைய > தினம் ஸித்தி > அடையப் போகிறார் > என்று யாருக்குத்தான் > தெரியும்?! > > பெரியவா அன்றைய > தினம் யாருக்குமே > தரிசனம் தரவில்லை. > ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். > பிரபலங்களின் வருகையும் > பெரியவாளுக்குத் > தெரிவிக்கப்பட்டது. > > அதே போல், > ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி > வந்திருக்கார்’ > என்றும் > சொல்லப்பட்டது. > சட்டென்று கண் > திறந்த பெரியவா, > மெள்ள நிமிர்ந்தார். > அருகில் > வரச்சொன்னார். பாதுகைகளை > அணிந்துகொண்டார். > அன்பரை > ஆசீர்வதித்தார். > > வேத > பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் > பெரியவாளிடம் > காட்டினர். > அதை வாங்கிப் > படித்தவர், > அதிலிருந்த தன்னுடைய > பெற்றோரின் > புகைப்படத்தை > கண்களில் > ஒற்றிக்கொண்டார். > பிறகு தன்னுடைய > பாதுகைகளை > அன்பரிடம் தந்தார். > ”இந்தப் பாதுகைகளை > எடுத்துண்டு > போ! ஈச்சங்குடி வேத > பாடசாலையில வை. நன்னா > நடக்கும்!’ > என சொல்லாமல் > சொல்லி, > ஆசி வழங்கினார். > > > > > > ஈச்சங்குடி வேத > பாடசாலை, > அவரின் பேரருளால் > இன்றைக்கும் > இயங்கி வருகிறது. > ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், > வேத பாடசாலையில் > தற்போது > புனரமைப்புப் > பணிகள் நடைபெற்று > வருகின்றன. > கீழ்த்தளத்தில் > வேத பாடசாலை, மேல் > தளத்தில் > பள்ளிக்கூடம் > எனக் கட்டுகிற > முயற்சிகள் > மேற்கொள்ளப்பட்டு > வருகின்றன. > > பெரியவாளின் > தாயாரால் வணங்கப் > பட்டு, > பெரியவாளின் > முயற்சியால் > புனருத்தாரணம் > செய்யப்பட்ட > ஸ்ரீகச்சபுரீஸ்வரர் > கோயில், அழகுறத் > திகழ்கிறது. > இவரை வணங்கினால், > நிலம் மற்றும் > வாஸ்து பிரச்னைகள் > யாவும் நீங்கி, வீடு- > மனையுடன் > குறையின்றி வாழ்வர் > என்பது ஐதீகம்! > > அருகில் உள்ள வேத > பாடசாலைக்குச் > சென்று, > அங்கேயுள்ள > பெரியவாளின் > பாதுகைகளை நமஸ்கரித்தால், > ஞானகுருவின் > பேரருளும் > கிடைக்கும் என்பது > உறுதி! > > > > > > > பிரபல > ஹரிகதா விற்பன்னர் > ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ் > பாலக்ருஷ்ண > சாஸ்திரிகள் சொன்னது > > > > > > ​காஞ்சிபுரத்திலே > இருக்காளே, காமகோடி > பெரியவா...சர்வஞா அவா. > > ஒரு தடவை > கும்பகோணத்திலே, > தர்சனத்துக்கு நாங்க > எல்லாம் போயிருந்தோம். > என் மாமனார் > அழைச்சிண்டு > போயிருந்தார். > > எனக்கா, மனசிலே ஒரு > பயம். ஸ்வாமிகள் > ரெண்டு, மூணு ன்னு > பண்ணிடுவார், பூஜை > முடிக்க. அப்புறம் நம்ப > சாப்பிடறதுக்கு > இன்னும் நேரம் ஆயிடும் > ன்னு... > அதனால நான் பூஜைக்கு > வரலை ன்னுட்டு > மடத்துக்கு போகலே. > > என் மாமனார் இதை > திருத்த முடியாது > ன்னுட்டு கிளம்பி > போய்ட்டார். அங்கே > பெரியவா, 'மாப்பிள்ளை > (என்னைத்தான்!!) எங்கே?' > ன்னுருக்கார். > 'அவருக்கு உடம்பு சரி > இல்லே, ரூம்ல > இருக்கார்' ன்னு > சொல்லி இருக்கார் என் > மாமனார். > > 'அவரை இங்கே > அழைச்சுண்டு வா' > என்று சொன்னார் > பெரியவாள். வந்து > கூப்ட்டா. > > எனக்கு கையும் ஓடலே, > காலும் ஓடலே... > > வெடவெடன்னுண்டு > பெரியவா முன்னாடி போய் > நின்னேன். > > 'ஓடம்பு > சரியில்லையோ?' > அப்டின்னார் பெரியவா. > > நான் மாமனாரை > பார்த்தேன். > > 'ஆமா, அவருக்கு உடம்பு > சரி இல்லே....' ன்னு > சொல்லிட்டு இது ஏன் > இப்படி படுத்தறது > என்கிற மாதிரி > பார்த்தார் மாமனார் > என்னை. > > 'ஆமாம் பெரியவா, > எனக்கு உடம்பு சரி > இல்லே'. > > 'குளத்துலே > குளிச்சியோ?' > > திரும்பவும் ஒரு முழி > முழிச்சிட்டு, 'ஆமாம் > பெரியவா, குளத்திலே > குளிச்சேன்'. > > 'தண்ணி நிறையா > இருக்கோ, ரொம்ப > ஜில்லுன்னு இருக்கோ'. > > 'ஆமாம் பெரியவா' > என்று சொன்னேன். என் > மாமனார் தலையில் தான் > அடித்துக் கொள்ள > வில்லை என்னை > பார்த்தார் பரிதாபமாக. > > > 'ஜுரமோ, உடம்பு ரொம்ப > சுடறதோ?' பெரியவா.... > > 'ஆமாம் பெரியவா...' > நான். > > 'சரி, உடம்பு சரி > இல்லேன்னா...ஒண்ணும் > சாப்ட படாது. வயத்தை > லங்கணம் போடறது தான் > அதுக்கு நல்ல மருந்து. > நானும் இன்னிக்கு பூஜை > > ரொம்ப விஸ்தாரமாவே > பண்ணப்போறேன்... > அப்படியே ஒரு ஓரமா > செவுத்துலே சாஞ்சு > ஒக்காந்துக்கோ...மூணு > நாலு மணி ஆயிடும். > > பூஜை முடிஞ்சா விட்டு, > தீர்த்த பிரசாதம் > தரேன். அதை வாங்கிண்டு > அப்புறமா கொஞ்சமா > ரசஞ்சாதமா சாப்பிடு. > எல்லாம் சரியா > போயிடும்'. > > அத்தனையும் அவா > கண்டுபிடிச்சிடுவா... > >

No comments:

Post a Comment